கலை, இலக்கியம், அரசியல், சமூகத் தொண்டு, வீரம், தேசியம், பேச்சாற்றல், செயல் வல்லமை மிக்க ஆளுமைகள், 100 பேரை கவிதை வடிவில் சித்தரிக்கும் நுால். மிகவும் எளிமையாக உள்ளது.
ஒவ்வொருவரின் பிறந்த, மறைந்த நாட்களை குறிப்பிட்டுள்ளது. ஒரு வரலாற்று ஆவணமாக உள்ளது. அவர்களின் படங்களை இணைத்துள்ளது அருமை. பாரதத் தாயின் மணிக்கொடி வடிவமைப்பில் தலைமை ஏற்றவர் சுரையா தியாப்ஜி.
அவரைப் பற்றி, ‘மூவர்ணக் கொடியால் நாட்டை சிறப்பித்து, செப்புமொழியால் கோடுகள் சேர்த்து, அசோகச் சக்கரம் நடுவில் வைத்தார்... பட்டொளி வீசும் பாரதக் கொடியை புகழ்ந்து பாடிட வாரீர் வாரீர்...’ என பாடப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்து அறிய வேண்டிய நுால்.
–
சீத்தலைச் சாத்தன்