வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் என்று சொல்லப்படுவது வியங்கோள் வினை முற்றின் இலக்கணம். இதன்படி திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் பாக்களுக்கு புரியும்படி ஒற்றை வரியில் கருத்து சொல்லி விளங்க வைக்கும் நுால்.
தீமையை செய்கிற சுற்றத்தாரும், தீயதே என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. வள்ளுவர் காட்டிய வரிசையில் சட்டென புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் சொல்லியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
திருக்குறள் தந்த வள்ளுவர் வழியை உணர்ந்து, அறிவுரைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், வாழ்வில் உச்சம் தொடலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அறத்தை உரைக்கும் அற்புத புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்