சோழ மண்ணில் நீண்ட காலம் ஆட்சி செலுத்திய மன்னன் ராஜேந்திர சோழன் வாழ்க்கை வரலாற்றை உரிய ஆதாரங்களுடன் தரும் நுால். எளிய நடையில் பிரமாண்டமாக படைக்கப்பட்டுள்ளது.
போர் வெற்றியை மட்டும் சொல்லவில்லை. ஆட்சி காலத்தில் நடந்த நாட்டின் நிர்வாகம், நீர் மேலாண்மை திட்டங்கள், அயல்நாட்டு மன்னர்களுடன் கொண்டிருந்த நட்புறவு, வாணிபத்தில் செலுத்திய ஏகபோக ஆதிக்கம் பற்றி எல்லாம் உரிய ஆதார குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளது. கட்டடக்கலை, நாட்டியம், சிற்பக்கலைகளில் முத்திரை பதித்திருந்த விபரங்களும் உள்ளன.
பழந்தமிழகத்தில் மேன்மையுடன் விளங்கி, மன்னரின் வாழ்க்கையை ஆதாரப்பூர்வமாக கூறும் நுால்.
– மதி