தமிழக அரசியல் வரலாற்றை கூறும் நுால். சமூக மாற்றங்கள், சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சியை எடுத்துரைக்கிறது.
நீதிக்கட்சி முதல் தற்போதைய ஆட்சி வரை நிகழ்ந்துள்ள மாற்றங்களை கூறுகிறது. தி.மு.க., பிரசாரத்தால் திக்குமுக்காடிய காங்கிரசின் தேர்தல் களத்தை அலசுகிறது. அரசு துறைகளில் தமிழின் வளர்ச்சி, திரைத் துறையில் ஏற்படுத்திய சமூக நீதி பார்வையை விவரிக்கிறது. கருணாநிதியின் வசனம், மேடைப் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தை கூறுகிறது.
கல்வி, மருத்துவம், தொழிலாளர், விவசாயிகள், மகளிர் நலன், தொழில் வளர்ச்சி, சமூக சீர்திருத்தங்களால் ஏற்பட்ட மாற்றத்தை பதிவிடுகிறது. சட்ட திட்டங்கள் இயற்றிய ஆண்டுகளுடன் விவரிக்கும் நுால்.
– -டி.எஸ்.ராயன்