வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப்பட்டுள்ள நுால்.
மகாபாரதத்தில் வீரம், விவேகம், அறிவு, ஞானம் பற்றி உள்ளது போல் கோபம், பழி வாங்கும் குணம், சதித் திட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நட்பு, தாராள குணம், தியாகம், கடமை, தன்னம்பிக்கை, நேர்மை, சுயக் கட்டுப்பாடு போன்ற நற்குணங்களையும், சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் போன்ற கெட்ட குணங்களையும் விளக்குகிறது.
பரத இனத்தின் வரலாறு, குரு, பாண்டவர்களின் 12 ஆண்டு கால காட்டு வாழ்க்கை தரப்பட்டுள்ளது. பாண்டவர் அணியில் பெண்கள் துயரப்படுவதையும் சொல்கிறது. பாண்டவர்கள் சொர்க்கம் செல்வதையும் விவரிக்கிறது. மகாபாரதத்தில் கதையை மிக எளிய நடையில் கூறுகிறது. படிக்க வேண்டிய நுால்.
– புலவர் ரா.நாராயணன்