நண்பனை கொலை செய்த தொழிலதிபருக்கு, என்ன தண்டனை கிடைக்கிறது என்பதை கூறும் நாவல் நுால்.
உதவியாளராக பணிபுரியும் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த தொழிலதிபர் அவளை ஒதுக்குகிறார். அவளது சகோதரன், இது தெரிந்து கோபம் கொள்கிறான். தொழிலதிபரை சந்தித்து நியாயம் கேட்டு சென்றதும் அவள் இறக்கிறாள். திடீரென அந்த தொழிலதிபரும் இறக்கிறார்.
பெண்ணின் சகோதரனை அதிகாரி கண்காணிக்கிறார். திடீரென, கொலை நடக்கும் விதம் வேறு மாதிரியாக இருப்பதால், போலீஸ் அதிகாரி செய்வதறியாது தவிக்கிறார். கொலை நடக்கும் விதத்தை கண்டுபிடித்து அதிர்ச்சியாகிறார் அதிகாரி. ஆர்வத்தை துாண்டும் வகையிலான நாவல் நுால்.
-– முகில்குமரன்