முகப்பு » கதைகள் » சின்னம்மா

சின்னம்மா

விலைரூ.200

ஆசிரியர் : எஸ்.ஏ.பி.

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
செல்வந்தர் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல் நுால். பாசமும், நேர்மையும் நிறைந்த பெண்ணை சுற்றியபடி கதை சுழல்கிறது.

மனைவி இறந்ததால், இரண்டு மகன்களுக்கு தந்தையான செல்வந்தர், மறுமணம் செய்கிறார். மகன்கள் வெளியூரில் படிக்கும் போதே மரணம் அடைகிறார். இதை அடுத்து, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல், குழப்பங்கள், சொத்து அபகரிப்பு சதித் திட்டங்கள் என, பரபரப்புடன் பின்னப்பட்டுள்ளது.

அண்ணன் – தம்பிக்குள் மோதல் ஏற்படுத்த நடந்த சூழ்ச்சி என வேகம் எடுக்கிறது. சம்பவங்கள் எல்லாம் காட்சிமயமாக விரிகின்றன. எளிய கலைநயமுள்ள விவரிப்புகள், படிக்கும் ஆர்வத்தை துாண்டுகின்றன. குமுதம் இதழில் அதன் ஆசிரியராக இருந்த எஸ்.ஏ.பி., தொடராக எழுதிய சுவாரசியம் மிக்க நாவல் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us