பிள்ளைகளை தண்டிப்பதற்கான உரிமையை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துடைய உரைநடை கவிதைகளின் தொகுப்பு நுால். தண்டிப்பது காயப்படுத்துவது அல்ல; கன்னம் சிவக்காமல் கோடு போட்டு எல்லையை காட்டுவது என சொல்கிறது.
செடி, கொடிகள், ஆடு, மாடு, கோழிகள், மனிதனுக்கு பாடம் புகட்டுகின்றன. புத்தி சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் ஒரே ஜீவன் மனிதன் மட்டுமே என உரைக்கிறது. மூடத்தனங்களை சாடும் உரைநடை கவிதைகள் நீள்கின்றன.
ஒட்டுதல் இல்லாத குடும்பங்கள் நிலைப்பதில்லை; கூட்டு வாழ்க்கை மனிதனுக்கு தேவை என்பதால் தான் குடும்பம் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதை உணர வேண்டும் போன்ற உரைநடை கவிதை சங்கமம் நுால்.
– புலவர் சு.மதியழகன்