வீடு, கோவில், பொது இடங்களில் செய்யப்படும் பூஜை, ஹோமம் பற்றி விபரமாகக் கூறும் நுால். கிரக சஞ்சாரத்திற்கு ஏற்ப தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது.
நவக்கிரக ஹோமத்தை தனியாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என எளிய விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. மந்திரம் சொல்லும் முறை, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், ஜபம், நவக்கிரக தேவதா சிறப்புகள் தனித்தனி தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.
சூரியன் வீரமும், சந்திரன் பதவியும், செவ்வாய் மங்கலமும், புதனும் குருவும் தரும் புத்தியும், சுக்கிரன் சுகமும், சனி நன்மையும், ராகு கேது வலிமையும் உயர்வும் தருவதாக நவக்கிரக பிரார்த்தனைக்கு பலன்களும் கூறப்பட்டுள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்