அன்றாட வாழ்வை மையமாக்கிய சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
அரசு வேலைக்காக படும் இன்னல்களை காட்டும், ‘கொடுக்கல் வாங்கல்’ கதை நேர்மையை அடுத்த தலைமுறைக்கு நகர்த்துகிறது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு, சில்லரை பிரச்னையை எப்படி ஏற்படுத்தும் என்பதை, ‘இருந்தென்ன லாபம்’ கதை சொல்கிறது.
தம்பதி, உறவினர் வாழ்க்கை புரிதலை, ‘எங்கே வாழ்க்கை தொடங்கும்’ கதை கேள்வி எழுப்புகிறது. முதியோர் இல்லத்தில் இருப்பவரை தேடி வரும் நாயை மையமாக உடைய, ‘காணாமற் போனவர்கள்’ கதை பிரமிப்பூட்டுகிறது.