தெளிவான பதில் கிடைத்தால் வாழ்வின் உச்சம் தொடலாம் என்பதே இந்த புத்தக சாரம். படித்து முடிக்கும் போது மனதில் உத்வேகமும் தெளிவும் பிறந்திருக்கும்.
எழுத்தாளர் தன்னை நோக்கி வந்த கேள்வி கணைகளை தொகுத்து உருவாக்கிய மாலை. ஒவ்வொருவர் மனதில் இருக்கும் கேள்விகளே பிரதிபலிப்பதால், எந்த இடத்திலும் தேக்கம் ஏற்படவில்லை. ஆன்மிகம், வாழ்வு பாடத்தை சுட்டிக்காட்டும் பதில்களால் குழப்பங்கள் நீங்கி விடுகின்றன.
சுவையான கதைகள், நிஜ வாழ்க்கை நிகழ்வுகள், உருவகம் போன்றவை உணர்ச்சிபூர்வமாக மனதில் பதிகின்றன. தோல்விகளை எதிர்கொள்ளும் வழிமுறையை எளிமையாக கற்றுத் தருகிறது.
– தி.க.நேத்ரா