ஆதித்த கரிகாலனை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள வரலாற்று நாவல். சோழர் ஆட்சி ஆதாரங்களின் பின்னணியில் கற்பனையாகப் புனையப்பட்டுள்ளது. உரையாடல் தற்கால நடையில் அமைந்துள்ளது.
ஆதித்த கரிகாலன் மென்மையாக இருந்திருந்தால் என்ற கோணத்தில் உருவகமாக்கி காட்டப்பட்டுள்ளது. கதையின் களம் கற்பனையுடன் முன்வைக்கப்பட்டுள்ளது. சோழர், பாண்டியர் கதை மாந்தர்களாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் பாண்டியர் ஆட்சி, மீனாட்சியம்மன் கோவில் பூஜை, ஆதித்த கரிகாலன், வீரபாண்டியன் இடையே மோதல் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ள நாவல்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு