அசுரர்கள் வரலாற்றை பற்றிய அருமையான நுால்.
புண்ணியத்தின் வடிவம் தெய்வம்; பாவத்தின் உருவகம் அசுரன்... இரண்டு தரப்புக்கும் எல்லா யுகங்களிலும் மோதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. புண்ணியம் செய்பவனும் தெய்வத்தை வணங்குகிறான். பெற்ற வரங்களை உலக நன்மைக்கு பயன்படுத்துகிறான். பாவம் செய்பவனும், தெய்வத்தை வணங்கி அரிய வரங்களை பெறுகிறான். மற்றவர்களை துன்புறுத்துகிறான்.
ராவணன் பெண்ணாசையால் புகழ் இழந்தான். இதுபோல் அசுரர்கள் 30 பேரை தேர்வு செய்து, பிறப்பு வரலாறு, பெற்ற வரங்கள், இழைத்த அநீதிகள், தண்டனை என விபரங்களை தொகுத்து தரும் நுால்.
– தி.செல்லப்பா