இலங்கைத் தமிழர் பேசும் மொழியில் எழுதியுள்ள நகைச்சுவை நாடகங்களின் தொகுப்பு நுால்.
கற்பனை வளமும், மொழி நயமும், கதாபாத்திரங்களை கண்முன் கொண்டு வருமாறு தேர்ந்தெடுத்து அற்புதமாக படைக்கப்பட்டுள்ளது.
சீண்டல், சிணுங்கல், சினத்துடன் மொழிதல், கேலி பேசி கிண்டலடிக்கும் வார்த்தைகள் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முத்திரை பதிக்கிறது.
கடிக்கிற நாயைக் கண்டால், உன் அம்மாவை நினைத்துக் கொள் என்று பிள்ளைக்கு தைரியம் சொல்கிறார் தந்தை. இப்படி நாடகம் முழுதும், நகைச்சுவை தோரணங்கள் பின்னிக் கிடக்கின்றன. கணவன், மனைவி உரையாடலை நகைச்சுவையாக பதிவு செய்துள்ளது. புத்தகத்தை படித்தவுடன் புத்துணர்ச்சி பரவுவதை உணரலாம். மேடையில் வரவேற்பை பெறும்.
– டாக்டர் கார்முகிலோன்