சமண மதத்தின் வரலாறு, தத்துவம், தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை ஆராயும் நுால். தமிழ் சமுதாயத்தில் தோன்றிய முக்கிய இலக்கியங்களை சுட்டிக்காட்டி தாக்கத்தை எடுத்துக் கூறுகிறது.
தமிழ் இலக்கியம் மற்றும் சமண மதத்தின் இணைப்பில் சீவக சிந்தாமணி தாக்கம் விளக்கப்பட்டுள்ளது. சமண அகிம்சை கொள்கை, அறம் மற்றும் துறவுத் தன்மையை நுணுக்கமாக ஆராய்கிறது. தமிழகத்தில் மன்னர்களும், வணிகர்களும் சமணத்தை ஏற்றுக்கொண்ட விதம், வீழ்ச்சி பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சமணம் தொடர்பான முக்கிய கோவில்கள், குகை சிற்பங்கள் பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமணத்தின் தாக்கத்தை புரிந்துகொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.
-– இளங்கோவன்