தவறான உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதகத்தை கதை வடிவில் எடுத்துக்கூறி சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வு ஊட்டும் நுால்.
காடுகளில் மனித நடமாட்டத்தால் கரடி விலங்கினத்துக்கு தவறான உணவு பழக்கம் ஏற்படுகிறது. மனிதர்களின் செயல்களை கவனித்து ஒரு கரடி குட்டியுடன் நகருக்குள் வருகிறது. அங்கு பிட்சா உணவு கடைக்குள் புகுந்து அந்த உணவை சாப்பிடுகின்றன. அதனால் உடல் உபாதை ஏற்படுகிறது.
அதை சரி செய்ய யோகா வகுப்புக்கு செல்கின்றன. யோகா ஆசிரியர் அவற்றின் உணவுப் பழக்கத்தை அறிந்து, அறிவூட்டுவதாக நகர்கிறது. தவறை திருத்துகின்றன கரடிகள். இது தான் கதையின் மையக் கருத்து. நகைச்சுவை ததும்பும் நடையில் சொல்லப்பட்டுள்ளது. விலங்கை முன் வைத்து சிறுவர்களுக்கு அறிவு புகட்டும் வகையில் அமைந்த நுால்.
– மலர்