நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, தொலைபேசி: 2848 2424. (பக்கம்: 240.)
சே குவேராவின் ஜனனம் முதல் மரணம் வரை இந்த நூலில் ஆசிரியர் எழுதியுள்ளார். சே குவேராவின் இளமை காலத்தில் அவரை பீடித்திருந்த ஆஸ்துமா நோய் தீவிரம் அவரை மருத்துவர் ஆக்கியது. அவர் பெற்றோர்களின் துணிச்சல்மிக்க செயல்களும், முற்போக்கு கருத்துக்களும் `சே' வை ஒரு மனிதனாகவும், உலகில் வாழும் அனைத்து இளைஞர்களுக்கும் கலங்கரை விளக்கமாகவும் மாற்றியது. `சே' என்றால் தோழர் என்று பொருள்.
சே குவேரா ஒரு புரட்சியாளராக விளங்கியதோடு மட்டுமல்லாமல், ஒரு கவிஞனாகவும் திகழ்ந்தார். அவருடைய சில
கவிதை துளிகளை இந்நூலில் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். அவருடைய சுற்றுப்பயணம் அவரை செம்மையாக்கியது. அவருடைய மனித நேயம் போற்றத்தக்கது. இந்நூலில் அழகாக, சே குவேராவின் பல புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தாலும், சில அச்சுப் பிழைகளை தவிர்த்திருக்கலாம்.