விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை - 641 001. (பக்கம்: 216)
சிறுவாணி மெயில் வார இதழில், ஆசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள், புத்தக வடிவில் தற்சமயம் வெளிவந்திருக்கிறது. கோவை நகர மக்கள் இந்தக் கட்டுரைத் தொகுப்பை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பர் என்பது நிச்சயம்.
ஆனால், கோவை நகரைப் பற்றித் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் அனேகமானவர்களை இந்தப் புத்தகம் நிச்சயம் கவர்ந்து இழுக்கும். கவியன்பன் வரலாற்று பிரக்ஞையுடன் எழுதியுள்ள கட்டுரைகள் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. காடாகவும், கட்டாந்தரையாகவும் இருந்த நிலப்பரப்பு மெல்ல மெல்ல வளர்ந்து, எப்படி தொழில் நகரமாகவும், தொழிலாளர்களின் பிழைப்புக் களமாகவும் உருப்பெற்றது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் இதுபோன்ற மாவட்டத் தலைநகர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய புத்தகம் வெளிக் கொணர முயற்சி செய்யக் கூடும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் கோவை நகர வரலாற்று ஆவணம் இது.