பக்கம்: 568+16
சமூக நாவல்களில் சாதனை படைத்த பாலகுமாரன், வரலாற்று நாவல் எழுதுவதிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். சோழர் குல வரலாற்றில் தஞ்சைப் பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் கலைநயம் மிக்க ஆன்மிக மையங்கள் என்பதுடன் எழுத்தாளர்களின் எழுத்துப் பசிக்கு தீனி போடும் களஞ்சியங்களாகும்.
பாலகுமாரனின் கை வண்ணத்தில், ராஜேந்திர சோழனின் வரலாறும், சோழ வள நாட்டின் பெருமையும், கலை இலக்கியத்தின் செழுமையும், இந்த வரலாற்றுப் புதினத்தில் அவருக்கே, உரிய அழகிய தமிழ்நடையில் பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான சரித்திர நவீனம்.