எங்கேயோ கிடக்கும் நாய்க்கு அருள் செய்ய பகவான் ஸ்ரீ ரமணரால் மட்டுமே முடியும். நள்ளிரவில் ஆசிரம புதர் பகுதியில் தன்னை காண தவித்து கிடந்த நாய்க்கு அன்பை வாரி வழங்கி மோட்சகதி வழங்குவது எப்பேற்பட்ட அனுபவத்தின் விளைவு.
உடல், மனதை பிரித்தறியும் வழியை அழகாகச்சொல்கிறார். ஒரு பாவமும் செய்யாத உடலை கொல்வது பாவம். மனம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்ற விளக்கம் அருமை. தடுமாறும் போதெல்லாம் ஆத்ம விசாரம் செய்ய சொல்கிறார்.
தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்காக உண்மையாகவே வாழ்ந்த மகானின் வரலாற்றை படிப்பது, அவருடன் பயணிப்பதற்கு சமம். ரமணருக்கு சூட்டப்பட்ட மாலை இது.
– எம்.எம்.ஜெ.,