நிறைமொழி மாந்தர் திருமூலர் இயற்றிய அற்புத நுால், மந்திரமாலையாகிய திருமந்திரம். அதில், ஒன்பதாம் தந்திர-த்தில் உள்ள, ‘சூனிய சம்பாசணை’ மறைபொருள் உரையாதலால், பாடல்கள் எழுபதும் பல்வேறு வகைகளில் பொருள் கொள்ள இடமளித்து நிற்கின்றன.
இந்நுாலில் பாடல்கள் அனைத்தும் சித்தாந்த சைவத்தின் கோட்பாடுகளை புதிர்களாகக் காட்டி விளக்குவது அருமை. இந்நுாலை படிப்பதன் மூலம் சைவ மெய்யியல் தத்துவங்களை தெளிந்துணர முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நுால் என்ற சிறப்பிற்குரியது.
– மாசிலா இராஜகுரு