பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை விளக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எய்தவன் இருக்க, ராகிங், பிராயச்சித்தம், வேலி, தியாகம், மர்மம் போன்ற 12 தலைப்புகளில் உள்ளன.
மாறிவரும் சமுதாயத்தில் மனித போராட்டங்களை விவரிக்கிறது. மாந்தர்கள் கருத்து வேறுபாட்டால் வரும் விளைவுகளை சித்தரிக்கிறது. உடல் ரீதியான பாதிப்பு உள்ளோர் வாழ்க்கை முறையை, அதை உள்ளடக்கிய கதாபாத்திரங்கள் வழியாக விளக்குகிறது.
காதல் திருமணம், குழந்தை இன்மை, மறுமணம், விவாகரத்து, உதவும் உள்ளம் போன்ற கருத்துகளை மையப்படுத்தி அமைந்துள்ளது. காமத்தை துாண்டும் மாத்திரையை லஞ்சமாக பயன்படுத்தியது குறித்து விவரிக்கிறது. கற்பனை கலந்து எழுத விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமையும் நுால்.
– ரா.நா.,