முகப்பு » ஆன்மிகம் » நுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்

நுாற்றெட்டுத் திருப்பதி வண்ண விருத்தம்

விலைரூ.0

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழில் வண்ணப்பாடல்கள் படைத்து மகிழச் செய்த புலவருள் தலையாயவர்  அருணகிரிநாதர். 15 ஆம் நுாற்றாண்டில், தமிழகமெங்கும் முருகன் புகழ்பாடி பெருமை பெற்றார்.
அவர் பாடியவை திருப்புகழ் எனப் போற்றப்பட்டு  வருகின்றன. 16 ஆம் நுாற்றாண்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இராம காதையை வண்ணப்பாடல்களில் இயற்றியுள்ளார்.
திருமால் எழுந்தருளியுள்ள, 108  திவ்விய தேசங்களைப் பற்றிய பிரபந்தங்கள் தமிழில் நிரம்ப உள்ளன. 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் பெருமைகளும், தலச்சிறப்புகளும், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியவர்களல் பாடப்பட்ட நுால்கள் நிரம்ப உள்ளன.
பெயர் தெரிய அறிய முடியாத புலவர் பலரால் எழுதப்பட்டு அச்சேறாமல் இருந்த ஓலைச்சுவடிகள், தாட்சுவடிகள் உ.வே.சா., நுால் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தவற்றை ஒன்று திரட்டித் தொகுத்து, முனைவர் பெ.சுயம்பு அவர்களின் சிறந்த உரையுடன் இந்நுால் வெளிவந்துள்ளது.
கவிக்கோ ஞானச்செல்வன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us