போற்றத்தக்க மனித மாண்புகளை சிறுகதைகளின் வழியாக வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். அறியப்படாத முகங்களை, பாத்திரங்கள் வழியாக காட்டுகிறது. தொகுப்பில், ஒரு கனவு மாதிரி என்ற தலைப்பில் துவங்கி, ைஷத்தான் வரை, 20 கதைகளை உள்ளடக்கியுள்ளது. இடையே, மாறு, மனமாற்றம், பெரிய மசூதி தெரு என, மாறுபட்ட தலைப்புகள் துாண்டும் வண்ணம் அமைந்து உள்ளன.
எளிய மொழி நடையில் மிக இயல்பாக கதை சொல்லும் பாணி, வாசிப்பின் ஆர்வத்தை வேகப்படுத்துகிறது. வேலுார் மாவட்ட பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களில் ஒரு பிரிவினரின் பேச்சு வழக்கை உள்ளுரையாகக் கொண்டுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட மனித மாண்புகளை மிக நுட்பமாக படம் பிடித்து காட்டுகிறது. அவற்றை வாசித்த உடன் நிறுத்தி, நிதானித்து, சிந்திக்க துாண்டுகிறது. எதிர்பாராத சொற்களில் துவங்கி, எதிர்பாரா திருப்பங்களை உள்ளடக்கி, நெகிழ்வை வெளிப்படுத்துகிறது.
இஸ்லாமிய மக்களின் பழக்க வழக்கங்கள், குடியிருக்கும் பகுதியில் நிலவும் செயல்பாடுகள், பண்பாடுகள் எல்லாம் மிகவும் யதார்த்த சிந்தனையுடன் சொல்லப்பட்டுள்ளன. பிரத்யேக சொற்களின் பின்னணியில், செயல்கள் விளக்கம் பெற்றுள்ளன. அவை இயல்பு மாறாமல் சித்தரிக்கப்பட்டு உள்ளன. இலக்கிய கனம் பொதிந்த ஆக்கங்களை உள்ளடக்கியுள்ளன இந்த கதைகள். குளிரை போர்த்தியபடி, துாங்கும் வாழ்நிலையை மிக நுட்பமாக விவரிக்கிறது இந்த நுால்.
– ராம்