முகப்பு » பொது » தீர்க்கமாய் யோசிக்க

தீர்க்கமாய் யோசிக்க தீக்குச்சிப் புதிர்கள்!

விலைரூ.110

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
வித்தியாசமான முறையில் சிந்திக்கத் துாண்டும், 100 புதிர்களைக் கொண்ட நுால். எளிதாக தீக்குச்சிகளைக் கொண்டு விடையைத் தேடலாம். விடையைக் கண்டுபிடித்த பின் சரி பார்ப்பதற்கு, நுாலின் இறுதியில் விடைகள் தரப்பட்டுள்ளன.

புத்தகத்தில் உள்ள புதிர்களைச் செய்து பார்ப்பதோடு, தரையில் தீக்குச்சிகளைப் பரப்பி செய்முறை விளக்கத்தோடும் புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்கலாம். நல்ல பொழுதுபோக்காகவும், சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளது.

ஒருவரேயன்றி இரண்டு பேர் சேர்ந்து புதிருக்கான விடையை அறியலாம். உதாரணத்திற்கு புதிர் 54ல், இரண்டு தீக்குச்சிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை ஐந்து என்ற எண்ணிற்கு மாற்றுக என்ற புதிருக்கு, ‘ஐஐ’ என்ற இரண்டு எழுத்தை ஆங்கில ‘வி’ அமைப்பில் வைக்க வேண்டும்; ரோமன் எழுத்தாகிய, ‘5’ என்ற எண்ணிற்குரிய குறியீடு கிடைக்கும். இதுபோன்ற பல புதிர்கள் சிந்தனையை வளர்க்கும். செயல் விளக்கம் செய்து பார்க்கலாம்.
 – பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us