முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2

விலைரூ.290

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி, தன் குருவுக்கு வந்த வாத நோயை தனக்கு மாற்றுமாறு வேண்டிக் கொண்டார். குரு நலம்பெற, நாராயண பட்டத்திரிக்கு வாத நோய் ஏற்பட்டு, உடலை வருத்தியது. இந்த நோயை தீர்க்குமாறு, கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை வேண்டுகிறார்.

வெறும் வேண்டுதலாக இல்லாமல், பாடல்களாக பாடுகிறார். 10 ஸ்லோகங்கள் ஒரு தசகம் வீதம், 103 ஸ்லோகங்கள் இயற்றுகிறார். ஒவ்வொரு தசகத்தையும் பெருமாளிடம் படித்து காட்டி சரி செய்ததாக வரலாறு கூறுகிறது.

ஸ்ரீமந் நாராயணீயம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பாகம் 1ல், பகவானின் அழகில் துவங்கி, பக்தர்களின் பெருமை, பெருமாளின் பல்வேறு அவதார நோக்கம், மகிமை விளக்கப்பட்டது.

பாகம் 2ல், காதலாகி கிருஷ்ணனிடம் கசிந்துருகிய பெண்கள், பிருந்தாவன லீலைகள், காதலும் மோட்சத்துக்கான வழி என்பதை விளக்கும் பாடல்கள் என, சொல்லி செல்கிறார் நாராயண பட்டத்திரி.

கோவர்த்தன மலை எடுத்தல், கோவிந்த பட்டாபிஷேகம், மதுரா நகர் புறப்படுதல், ஹம்சன் வதம் என தொடர்கிறது. இறுதியில், கர்மங்களின் வினைப்பயன், பக்தியின் மேன்மை, தியானம் மற்றும் விஷ்ணுவின் பெருமையுடன் நிறைவடைகிறது.
சர்வமும் கிருஷ்ணார்ப்பணம் என நினைப்பவர்களுக்கு, இந்த புத்தகம் சமஸ்கிருத ஸ்லோகத்துடன் இணைந்த வழிகாட்டியாக இருக்கும்.
எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us