சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பற்றிய நினைவலைகளில் இருந்து திரட்டிய கருத்துக்கள், 40 தலைப்புகளில் கட்டுரையாக வடிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் வகுப்பு வரை படித்தவர் ம.பொ.சி., தமிழக வட எல்லை போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். அவர் எழுதிய நுால்கள், பல்கலைக்கழகத்தில் பாடமாக அமைந்தது வியப்பூட்டும் செய்தி.
இலக்கியமும், அரசியலும் இரண்டு கண்களாக கொண்ட அவரது வாழ்க்கை சம்பவங்கள் நுாலாக்கப்பட்டுள்ளன. சமூகத்தைப் படிக்காமல் யாரும் சிறந்த எழுத்தாளர் ஆகிவிட முடியாது என குறிப்பிட்டுள்ளது அருமையாக உள்ளது. நல்ல தலைவரின் வரலாறு, இளம் தலைமுறைக்கு உதவும்.
– சீத்தலைச் சாத்தன்