முகப்பு » ஆன்மிகம் » திருமுறையுள் கருத்தும் கதையும்

திருமுறையுள் கருத்தும் கதையும்

விலைரூ.360

ஆசிரியர் : உமா பாலசுப்ரமணியன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கருத்தைக் கதையோடு சொல்லி விளங்க வைக்கும் நுால். திருமுறைப் பாடல்கள் சுருக்கமாகச் சொன்னவற்றை சுவையாக விளக்கிய பாங்கு விரவிப் பரவியுள்ளது. ‘சுந்தரர் அவினாசி அப்பனைப் பாட, தாமரைத் தடாகத்திலிருந்து முதலை, தானும் அப்பாடலைக் கேட்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது.

நுால் நுாற்கும் ராட்டினத்தில் சிலந்தி வலை பின்னியது. வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்டவில்லை. சடையப்ப வள்ளல் நுாற்றில் ஒருவர் அல்ல; ஆயிரத்தில் ஒருவர்’ போன்ற நயங்களுக்குப் பஞ்சமில்லை.

கந்தர் அலங்காரம், திருமந்திரம், சிவராத்திரி புராணம், அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாடல் என மேற்கோள்கள் காட்டி, சொல்ல வந்ததற்கு தொடர்புடைய பிற நுால்கள் மீதான புலமையை திறம்பட வெளிப்படுத்துகிறார். திருமுறைப் பாடல்களை விளக்கும் சாக்கில் பல சிவத் தலங்களுக்கும் அழைத்துச் சென்று பரவசப்படுத்துகிறார். ‘கனிக்கும், கரும்புக்கும் எட்டா இனியவன்’ என்பன போன்ற அத்தியாய தலைப்புகள், கவனத்தை திசை திருப்ப விடாமல் செய்கின்றன.

பிரபு சங்கர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us