முகப்பு » ஆன்மிகம் » சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை முழுவதும் மூலமும் உரையும்)

சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை முழுவதும் மூலமும் உரையும்)

விலைரூ.300

ஆசிரியர் : சு.சடையப்பன் எம்.ஏ., பி.எட்.,

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஊர் ஊராகச் சென்று இறைவனை வழிபட்ட சுந்தரர் தேவார பாடல்கள் இடம் பெற்றுள்ள நுால். ஒவ்வொரு பதிக சிறப்பும் முன்னுரையில் தரப்பட்டுள்ளன. திருவாரூர் என்ற பதியின் சிறப்பாக, மனுநீதிச் சோழன் ஆண்ட பதி என்றும், நமிநந்தியடிகள் நீர் கொண்டு விளக்கெரித்த ஊர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதியிலும் இறைவன், இறைவி பெயர், ஸ்தல மரங்கள் பற்றிய குறிப்பு உள்ளது.

முதல் பாடலான, ‘பித்தா பிறை சூடி...’ என்பதில் அமைந்த வரலாற்றுச் செய்தியை குறிப்பிடுகிறது. இறைவன் ஏழிசையாகவும், இசைப் பயனாகவும் உள்ளவன் என்று பாடியுள்ளார். சுந்தரரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை அறிந்து கொள்ள துணை செய்யும் நுால்.

புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us