முகப்பு » கதைகள் » ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை

விலைரூ.230

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, கதை சொன்னா பிடிக்கும் தானே... அதைத் தான் சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி குண்டடிபட்டு கிடக்கும் போது, பழைய அன்பு மாறாமல் பாதுகாக்க முடிகிறதென்றால் அந்த காதல் தானே பக்தி. இதுவும் ஒருவகையில் ஆத்திகம் பேசுகிற அன்பு தான்.

அன்பு தானே கடவுள். தட்டை வீசியெறியும் கதாநாயகியை கோபமாக சீண்டாமல் அன்பாக அரவணைக்கும் பண்பு தானே கடவுள். கதறியழுது, கடவுளைத் திட்டிய போது, ‘போனது தலைப்பாகை தான், தலை இல்லையே’ என்று கடவுள் பக்கம் மடைமாற்றுவது சிறப்பு சேர்க்கிறது.

இந்த புத்தகம் விறுவிறுப்பு குறையாமல் உள்ளது. நிறைவாக லோக தர்மி, நாட்டிய தர்மி சொல்லும் விதமும் அப்படித்தான். புத்தகத்தை எடுத்ததும் தெரியாது... படித்து முடித்ததும் தெரியாது. அப்படி ஒரு மாஜிக்.

எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us