பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடும் நுால். தமிழக அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, தமிழகத்திற்கு 12 ஸ்மார்ட் சிட்டி திட்டம் தந்தது, சீன பட்டாசுக்குத் தடை விதித்து சிவகாசி பட்டாசை மீட்டெடுத்தது, தமிழகத்தை வளமாக்கும் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்தது என பட்டியல் நீள்கிறது.
வானொலியில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிகளில் தமிழ், தமிழர், தமிழகம் தொடர்பாக பேசியவையும் இடம் பெற்றுள்ளன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கப்பட்ட வீரர்களான ஜி.எஸ்.லட்சுமண ஐயர், வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, கடலுார் அஞ்சலையம்மாள், துாக்குமேடை ராஜகோபால், ஒண்டிவீரன் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஆற்றிவரும் நலத்திட்டங்களை விளக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்