மனவியலுக்கும், ஆன்மிக சிந்தனைக்கும் உள்ள தொடர்பு பற்றி விவரிக்கும் நுால். அச்சம் அகற்றவும், மன வலிமை பெறவும் வழிமுறைகள் சுட்டப்பட்டுள்ளன.
உணர்ச்சியை ஒழுங்குபடுத்தி உழைப்பில் ஈடுபாடு கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும் என்கிறது. துன்பத்திற்கு காரணம் மனச்சலனமே என்றும், பகல் கனவு மனச்சோம்பலைத் தான் தரும் என்றும் விவரிக்கிறது.
உடலுறவில் ஏற்படும் சிக்கல்கள், ஆண்மை குறைவு நீக்கும் மனோதத்துவ சிகிச்சை பற்றியும் குறிப்பிடுகிறது.
மகிழ்ச்சியான வாழ்வுக்கு உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்