* நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.