கண்ணப்பன் பதிப்பகம், த.பெ.எண்.8859, 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 272. விலை: ரூ. 80)
சரத் சந்திரரின் ஆரம்ப கால நாவல்களில் இந்த நாவலும் ஒன்று. சிறந்த குணச்சித்திர ஓவியம். சுபதா - இந்து குடும்பத்தின் லட்சியத் தாய். உலகமே தலைகீழாக புரண்டாலும் அவளுக்குத் தன் குடும்பம் தான் முக்கியம். பொறுமை என்ற வார்த்தைக்குப் பூரணமான பொருள் கூற வேண்டுமானால் அதற்கு மாலதியின் தாய் சுபதாவை உதாரணம் கூறிவிடலாம்!
ஒரே காட்சியில் வந்து விட்டுப் போகும் விலை மகள் காத்யாயனியிடம் உள்ள உயர்ந்த பண்புகளையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்! அவள் எவ்வளவு மோசமான வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்துப் பெண்களுக்கு உரிய தர்ம புத்தியும் மறைந்து விடாது என்பதை சரத்சந்திரர் விளக்குகிறார். இலக்கியம் பொக்கிஷம்!