பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனை கவர்ந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்துலகில் சாதனையாளர்கள் புதுமைபித்தன், கல்கி, விந்தன் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
தன் புத்தக வாசிப்பு அனுபவம் குறித்து, ஜெயகாந்தன் எழுதிய சூடான கட்டுரை முன்னுரையாக இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து, புதுமைபித்தன், கல்கி, பி.எஸ்.ராமையா, சங்கு சுப்பிரமணியம், விந்தன், சீனிவாசராகவன் உட்பட, 15 பேரின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தான் ஒரு வாசகன் அல்ல என நிறுவும் ஜெயகாந்தன், எந்த புத்தகமும் சிந்தையை கவர அனுமதித்ததில்லை என தெரிவித்துள்ளார். அந்த தீவிரத்தன்மைக்கு மத்தியிலும் கவர்ந்த படைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எழுத்தாளரை கவர்ந்தவர்களின் படைப்பு நுால்.
– ராம்