சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.
வாழ்வில் உயரும் விதமாக உயரிய கருத்தை முன் வைக்கின்றன சிறுகதைகள். சிந்தனையை துாண்டும் விதமாக இருக்கின்றன. குறைந்த வருமானம் இருந்தாலும், உறவுகளுடன் சந்தோஷமாக வாழ்வதே சிறப்பு என்பதை ‘துணைவி’ சிறுகதை தெளிவுபடுத்துகிறது.
அழகால் உண்டாகும் ஆபத்துகளையும், அது ஆணவ மிகுதியாகி அழிவுப்பாதையை எட்டுவதையும் காட்டும், ‘ஆணவம்’ கதை சிந்திக்க வைக்கிறது. அப்பா போல் பிள்ளை, வாழ வந்தவள் என்ற குறுநாவல்களில் பாத்திரங்கள், நம்பிக்கை ஊட்டும் விதமாக தனித்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளன. அர்த்தம் நிறைந்த கதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு