நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 174. விலை: ரூ.50).
பதினான்கு சிறுகதைகளைக் கொண்ட தொகுதி. கிராமத்து மண்ணோடு, புழுதியோடு, புரண்டு உறங்கி எழுந்ததற்கு அடையாள மான மணம் - இந்த சிறுகதைகளில் வீசிக் கொண்டு இருக்கிறது! இந்த கதைகள் - கொங்கு நாட்டு ஆன்மாக்கள் இன்றும் கண்டு கொண்டிருக்கின்ற `ரண வலி'யின் வெளிப்பாடுகள்!சமுதாய முன்னேற்றத்திற்குக் களம் அமைக்கும் மணி, மணியான கதைகள்!