கிழக்கு பதிப்பகம் விலை: ரூ.100
உலகின் மிகப் புராதனமான மதங்களுள் ஒன்று யூதமதம்.
எகிப்திலிருந்து யூதர்கள் முதல்முதலில் பாலஸ்தீனை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது முதல் ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்,யுத்தம்தான்.
வாழ்க்கைப் பிரச்னைகளுக்காக ஐரோப்பா முழுவதும் பரவி, இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டு மிகுந்த சோதனைகளைக் கொடுத்தது.ஹிட்லரின் ஜெர்மனியில் கொத்துக் கொத்தாக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
தமது சரித்திரமெங்கும் அடித்துத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த யூதர்கள், தமக்கென்று இஸ்ரேல் என்கிற தனிநாடு அமைந்தபிறகு, அந்த மண்ணின் பூர்வகுடிகளான பாலஸ்தீன் அரேபியர்களை அதேபோலத்தான் அடித்துத் துரத்தினார்கள்; இன்றும் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் வன்மம், துவேஷம், குரோதம்.அதனால் நிரந்தர யுத்தம். இன்னொரு பக்கம் சுய வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வமுடன் அத்தனை துறையிலும் சாதனை படைக்கும் வேகம், ஆர்வம், மேலோங்கிய திறமை. அப்படியே படம்பிடிக்கிறது இந்நூல்.