திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், 56/21, முதல் அவென்யு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-600 020. (பக்கம்:88)
சாகித்ய அகடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுவின் அணிந்துரையுடன் ஆரம்பமாகும் இந்த நூலில், பாரதியாரின் பாஞ்சாலி சபதமும், ஓஷோவின் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய பார்வையும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. விரிவாக எழுதப்பட வேண்டிய இந்த ஒப்பாய்வை சுருக்கமாக ஆசிரியர் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.இதில் உள்ள தகவல்களைப் படிக்கையில், விரிவுபடுத்தப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளடக்கிய இந்த, "தலைப்பை மரபின் முத்தையா தமிழ் கூறும் நல்லுலகுக்கு பெரிய அளவில் வழங்க வேண்டும் என்று கேட்க வைக்கிறது.