இந்த நூலில், திருவாய்மொழி, பாராயண கிரமத்திற்கான, உடுக்குறியீடுகளோடு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பெரியாழ்வாரின் பல்லாண்டு, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி, ஆண்டாள் பாடிய திருப்பாவை, மதுரகவியாழ்வார் பாடிய, ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’, திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமாநுச நூற்றந்தாதி, வேதாந்த தேசிகரின் அதிகார சங்கிரகம், பிரபந்த சாரம், நயினார் ஆசார்யரின் பிள்ளையந்தாதி, சாற்றுமுறை வாழித் திருநாமம், ௧௦௮ திவ்ய தேச தலங்களுக்கான, ஆங்கில வழிகாட்டி கையேடு என, அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
கோவை, கணபதி போஸ்ட், ஆவாரம்பாளையம் என்ற ஊரில், வேணுகோபாலப் பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில், புனருத்தாரண திருப்பணிக்கு, இந்த நூலின் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை, அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக, முன்னுரையில், பதிப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.