தமிழ் மொழி, தமிழகம் மற்றும் தமிழர்களின் வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்! இணையதள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில், தான் படித்தவற்றை தொகுத்து அளித்திருக்கிறார், நூலாசிரியர்.
திருக்குறள், லெமூரியா கண்டம், தமிழர்களின் உணவு, குடவோலை தேர்தல் முறை, பாரம்பரிய விளையாட்டுகள், திண்ணை வீட்டின் தத்துவம், ஆலய வழிபாட்டு தத்துவம் என, புத்தகத்தின் நோக்கம், சல்லி வேராக பரவி இருக்கிறது!
தமிழர்கள், மலேசியா சென்றதன் விளைவாக, தமிழ் வார்த்தைகள், மலாய் மொழியில் எத்தனை இடம்பெற்றிருக்கின்றன என்ற பட்டியலும், மேலைநாட்டு கலாசாரத்தால், அழிந்த நமது பண்பாட்டு நெறிகள், மெக்காலே கல்வி முறையின் பாதிப்பு ஆகிய கட்டுரைகளும் கவனம் ஈர்க்கின்றன. புத்தகத்தில் எண்ணற்ற தகவல்கள் குவிந்துள்ளன. மொத்தம், ௩௧ தலைப்புகளில், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
– சி.கலாதம்பி