அன்றாட நடவடிக்கை, செயலை கூர்ந்து கவனிப்பதால் வாழ்க்கை பாதை மாறுமா... மாற்றலாம் என நிறுவ முயல்கிறது இந்த நுால். வெறுப்பை துறந்து, வெற்றிப் படிகளில் ஏற வைக்கும் மந்திரங்களை விளக்குகிறது. ஈடுபாட்டுடன் வாழ்ந்து, அன்றாட நிகழ்வு களை அணுக கற்றுத்தருகிறது.
புரியும் வகை விளக்கப்படங்களுடன் மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. குறுந்தலைப்புகளில், தகவல்கள் தொகுத்து கூறப்பட்டுள்ளன. சிறு செயல்களை கவனிப்பதால், பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எண்ணம், சொல், செயல், சைகை, புற வாழ்க்கை என அனைத்திலும் கவனம் செலுத்தி, எளிமையான அறிவுரைகளை தருகிறது. வாழ்வில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. செயல்களில் உள்ள வரலாற்று பின்னணி, அவற்றுக்கு உலக அளவிலான அங்கீகாரம் போன்றவற்றை அழுத்தம் திருத்தமாக உரைக்கிறது. நம்பிக்கை மிகுந்தவர்கள் முன்னேற துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சிரத்தையுடனான உழைப்பு நுாலின் முழுப் பகுதியிலும் தெரிகிறது.
– அமுதன்