தென்னகத்தில் நாயக்கர் ஆட்சியை குறித்து சொல்லும் நுால். போர்ச்சுகீசியர்களும், மேனாட்டுப் பாதிரிகளும் தமிழகத்தில் காலுான்றிய கால கட்டமான, 17ம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் திருமலை நாயக்கர் 1623ல் அரியணை ஏறி ஆட்சி புரிந்தார். அவரது 35 ஆண்டு கால வரலாற்றை விளக்கும் நுால்.
தலைநகரை திருச்சியிலிருந்து, மதுரைக்கு மாற்றிய பின் அவரது ஆட்சி சிறப்புற விளங்கலாயிற்று. அந்த ஆட்சி முறையையும், கலைப் பணியையும், கோவில்கள் அமைத்த செயல்களையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
குறிப்பிடத்தக்க ஐந்து போர்கள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. மதுரைக்குப் படையெடுத்து வந்த மைசூர் படை, வெறிகொண்டு பொதுமக்களின் மூக்கை அறுத்த மூக்கறுப்புப் போர், வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த செய்தியை தெரிவிக்கிறது.
திருமலை நாயக்கரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், நிர்வாக முறையையும் அறிந்து கொள்ள உதவும் நுால்.
– ராம.குருநாதன்