யாப்பிலக்கண அடிப்படையில் திருக்குறள் செய்யுள் ஒவ்வொன்றையும் அலகிட்டு உரைக்கும் நுால். அனைத்துக் குறட்பாக்களையும், அலகு பிரித்து தனித்தனியாக நேரசை, நிரையசை மற்றும் தளை, அடிகளை காட்டியிருப்பது அரிய செயலாகும். அதை பொறுமையாகச் செய்திருப்பதை இந்த நுாலில் காணலாம்.
தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் கற்கும் இளைஞர்களுக்கும் பயன்படும்படியான நுாலாகத் திகழ்வதோடு, சீர் பிரிப்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. – ராம.குருநாதன்