முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொன்மொழிகளை அடிப்படையாக கொண்டு விளக்கி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் வடிவில் நுால். எல்லா கதைகளிலும் அப்துல் கலாமின் போதனை, காந்தியடிகளின் கொள்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. வள்ளுவரின் வரிகள் மேற்கோளாக காட்டப்பட்டு உள்ளன.
ஜாதி, மதம் கடந்த சமத்துவ சமுதாயம் காண விழையும் கருத்துகளை, மையக்கருவாக கொண்ட கதைகள். பனை மரம் பற்றிய பல அரிய தகவல்களைக் கொண்டு விளக்கப்பட்டு உள்ளது, ‘பனை மரத்தை வெட்டாதீர்கள்’ என்னும் சிறுகதை.
செவ்வாய் கோள் குறித்த பல நுட்பமான செய்திகளை பதிவிட்டிருக்கும் ‘செந்தமிழ்ச் செல்வி’ கதை தமிழ்ப்பற்றை உணர்த்தும். பொறாமை, காதல் வெறியுடன் சேர்ந்தால் கொலைக்கும் அஞ்சாது என்பதை நிரூபணம் செய்கிறது, ‘புஷ்பக விமானம்’ என்ற கதை. மாணவர்களுக்கு பயனுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்