திருக்குறளைப் பற்றி, 100 புதிர்கள் அமைந்துள்ள நுால். திருக்குறள் எழுத்துகளைத் தனித்தனி கட்டங்களில் புதிர்களில் முறை மாற்றித் தரப்பட்டுள்ளன. கோடிட்ட இடத்தில் ஒரு திருக்குறள் சீரின் முதல் எழுத்து தரப்பட்டுள்ளது. யூகித்து அந்தச் சீரை கோடிட்ட இடத்தில் நிரப்பினால், குறளை முறையாக நிறைவு செய்யலாம்.
அடுத்து, கோடிட்ட இடம் மட்டும் தந்து, சீர்கள் முறை மாற்றி தரப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக்கி சரியாக எழுத வேண்டும். இப்படி தரப்பட்டுள்ள, 100 குறள்களில் நல்ல பயிற்சி ஏற்படும். ஒவ்வொரு குறளுக்கும் பொழிப்புரையும் தரப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் பயிற்சி அளிக்க உதவும். சிறந்த பொழுது போக்காகவும், அறிவுத் தேடல் முயற்சியாகவும் உள்ள நுால்.
– புலவர் இரா.நாராயணன்