செய்யுளில் அமைந்த இலக்கணத்திற்கு உரைநடையில் விளக்கம் வழங்கும் நுால். எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் என அறிமுகப்படுத்துகிறது. இரண்டு சொற்களுக்கு இடையே வல்லின எழுத்துகள் எங்கெல்லாம் வரும், வராது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஓரளவு தமிழ் அறிந்தோரும் எளிதில் கற்கும் வகையில் அமைந்துள்ளது. இதை முழுமையாகக் கற்றால் தமிழ் மொழியில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுத முடியும். தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் எவை என்ற வரையறையுடன், எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
பழைய இலக்கியங்களை எவ்வாறு பொருள் புரிந்து படிக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் பொருள்கோள் என்னும் இலக்கண விளக்கத்தை வழங்குகிறது. பழமையான நான்கு வகை பா இலக்கணத்தையும் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்