திருமூலரின் பின்புலம், காலம், தந்திரங்கள், தத்துவங்களை தெளிவுபடுத்தி பாடல்களில் காணப்படும் செறிவான அறிவியல் கூறுகளை விளக்கும் நுால். திருமூலர் வாழ்க்கை தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள பல கருத்துகளை மறுத்து, அவர் மீதுள்ள சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற பார்வை ஏற்பட்ட காரணம் கூறப்பட்டுள்ளது. பொதுமையான சமூகக் கருத்தியல்களை முன்வைத்து, திருமந்திரத்துக்கும், திருக்குறளுக்குமான கருத்தொற்றுமைகள் விளக்கி ஒப்பிட்டுக் காட்டப்பட்டு உள்ளது.
திருமூலரின் காலம், தமிழ் மொழியின் மீதான நிலைப்பாடு, திருமந்திரம் என்று பெயர் வைத்ததற்கான காரணம், திருமந்திரங்களில் உள்ள தந்திரங்களின் பகுப்புகள், உட்பிரிவுகள், திருமூலர் கோட்பாடு போன்ற கருத்துகள் பல கோணங்களில் ஆய்ந்திருப்பதை காணமுடிகிறது. ஆழ்ந்து படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு