வங்கி பெண் ஊழியரின் தற்கொலை மற்றும் உறவினருடன் வசிப்பவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன் வைத்து எழுதப்பட்ட குறுநாவல் தொகுப்பு நுால். சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது.
முதலாவதாக, ‘வெள்ளிக்கிழமை என்ன நடந்தது’ என்ற கதையில், வங்கி பெண் ஊழியரின் தற்கொலை வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. வழக்கை விசாரிக்க வரும் போலீசுக்கு மேலாளர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். அந்த நேரத்தில் தற்கொலைக்கு யார் காரணம் என எழுதிய கடிதம் அதிர்ச்சி தருகிறது. படிக்கத் துாண்டும்.
உறவுகள் கைவிட்ட நிலையில், உறவினருடன் வாழ்பவர் வாழ்க்கை, ‘சித்தப்பா’ குறுநாவலில் சஸ்பென்சாக கூறப்பட்டுள்ளது. இரண்டும் ரசிக்கும்படி உள்ளன.
--– முகில்குமரன்