நாட்டுக்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய ஆளுமைகளின் வரலாற்றையும், பணியையும் விவரிக்கும் நுால்.
எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னை ஜார்ஜ் கோட்டையை தகர்க்க குண்டு வீசிய செண்பகராமன் வீர வரலாறு சுட்டப்பட்டுள்ளது.
வள்ளலாரும், பாரதியாரும் எளிய நடையில் கவிதை பாட முன்னோடியாக திகழ்ந்த தாயுமானவர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், வ.உ.சி., ரா.பி.சேதுப்பிள்ளை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் வாழ்க்கை குறிப்பும், அருந்தொண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ள நுால்.
--– புலவர் சு.மதியழகன்